மயிலாடுதுறை புளியந்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் கூட்டமாக உலா வருகின்றன. இவை இரவுநேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றனர். இதனால் வாகனங்களில் வருபவர்கள் மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.