போக்குவரத்து இடையூறு

Update: 2023-03-29 09:42 GMT

குன்னூர் அருகே எல்லநள்ளி முதல் பழைய அருவங்காடு, கேத்தொரை செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி