போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-26 13:21 GMT

அரியலூர் நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது குறிப்பாக அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை குறுகிய பகுதியாகும். இங்கு அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை திருச்சி, பெரம்பலூர், திட்டக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் தனியார் பஸ்கள் பஸ் நிறுத்தங்கள் இல்லாத பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் சில தனியார் நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் முதன்மை சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்றுவிட்டு நீண்ட நேரம் கழித்து வருகின்றனர். மேலும் இவ்வழியாக தினமும் அடிக்கடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு 108 ஆம்புலன்சில் விபத்தில் அடிபட்ட நபர்கள், கர்ப்பிணிகள், வயதான நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாமல் போக்குவரத்து இடையூறில் சிக்கி விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி