மயிலாடுதுறை மயூரநாதர் மேலவீதி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.இவை இரவு நேரங்களில் சாலை நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றனர். இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றன. இவற்றால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?