வேகத்தடைக்கு வெள்ளைகோடு தேவை

Update: 2023-03-19 14:33 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பெரியகண்ணாரத்தெரு பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் வெள்ளை கோடுகள் வரையப்படவில்லை. இதன்காரணமாக வாகனங்களில் வருபவர்கள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடையில் வேகத்தடைகள் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்