அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-03-15 08:53 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி சபோக் பகுதிக்கு கடந்த பல மாதங்களாக அரசு பஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குறிப்பிட்ட நாட்களிலாவது அந்த பகுதிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி