பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-05 11:02 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கீழபனகாட்டாங்குடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி காட்சி அளிக்கிறது. குறிப்பாக கட்டிடத்தில் நிழற்குடையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.மேலும், நிழற்குடையை சுற்றிசெடிகொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் பயணிகள் நிழற்குடையைபொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் பயணிகள் நிழற்குடையை முறையாக பராமரித்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குகொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி