கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-03-01 17:31 GMT
மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முருக்கேரி, சிறுவாடி, நகர், நடுக்குப்பம், ஓமிப்பேர், கிளாப்பாக்கம், அடசல், பிரம்மதேசம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திண்டிவனத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆனால் போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி மரக்காணம் பகுதியில் இருந்து திண்டிவனத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி