மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு தினமும் மயிலாடுதுறை இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக புதன் கிழமைகளில் போதுமான பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் கூட்டம் நெரிசலும் இருப்பதால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை