நிழற்குடை வசதி வேண்டும்

Update: 2023-02-01 13:03 GMT
திருச்சி மாவட்டம் நெம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து லால்குடி மார்க்கமாக அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்காட்டுப்பள்ளி, திருமானூர் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கிறது. இதனால் நெம்பர் ஒன் பஸ் நிறுத்தம் பகுதிக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு நிழற்குடை வசதி இல்லை. இதனால் வெயில் மற்றும் மழையால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்