வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-01-29 12:03 GMT

கரூர் மாவட்டம் க.பரமத்தி, தென்னிலை, குப்பம், புன்னம்சத்திரம், உப்புபாளையம், புன்னம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களை எந்திரம் மூலம் அரைத்து செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த செயற்கை மணல்கள் கரூர், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் கொண்டு செல்லப்படும் செயற்கை மணல்கள் அதிகளவு கொண்டு செல்வதால் லாரிகள் வேகமாக செல்லும்போது லாரியின் மட்டத்திற்கு மேல் உள்ள மணல்கள் காற்றில் பறக்கின்றன. இதனால் லாரியின் பின்னால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி