மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, மங்கைமடம் கடை வீதி போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்துவது, கூட்டமாக நிற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.