லாரிகளால் தொடரும் விபத்துகள்

Update: 2023-01-25 12:52 GMT

சமீப காலமாக அரவக்குறிச்சி நகர பகுதிக்குள் தேவையில்லாத சரக்கு லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு சிமெண்டு லோடு ஏற்றி செல்லும் லாரிகள் அரவக்குறிச்சி நகரப் பகுதியில் வந்து செல்கின்றன. அரவக்குறிச்சி நகரப் பகுதியில் குறிப்பிட்ட லாரிகள் அதிவேகமாக செல்கிறது. இதனால் சிறு சிறு விபத்துக்கள் நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நகரப்பகுதிக்குள் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் போலீஸ் ஏட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோல் விபத்து நடக்காமல் இருக்க தேவையில்லாமல் அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் வரும் லாரிகளை மாற்றுப் பாதையில் திருப்பிவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி