போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-08 09:33 GMT

கூடலூரில் இருந்து தேவர்சோலை, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. முக்கிய சாலையாக இருப்பதால், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த சாலையில் பிதிர்காடு பஜாரில் நடுவில் உள்ளூர் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் வெளியூர் வாகனங்கள் இயக்க முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்