உயிர்பலி வாங்க காத்திருக்கும் நிழற்குடை

Update: 2023-01-04 12:43 GMT
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்ஒரத்தை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்லும் வகையில் கீழ் ஓரத்தை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே மழை பெய்யும்போது இந்த நிழற்குடையின் கீழ் நின்று பொதுமக்கள் பஸ் ஏறி பயணம் செய்ய முயலும்போது, இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி