கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் ஆசாரிப்பட்டறை என்ற ஊர் உள்ளது. இப்பகுதி பயணிகளின் நலன் கருதி அங்கு நிழற்குடை கட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் இந்த நிழற்குடையில் அமர்ந்திருந்து அவர்கள் செல்லும் ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த நிழல்குடை அருகே எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.