கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-28 09:43 GMT

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதூர் பகுதிக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. ஒருசில அரசு பஸ்களே இயக்கப்படுகிறது. அந்த பஸ்களும் குறித்த நேரத்தில் இயக்கப்படுவது கிடையாது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதுப்புதூர் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்