தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-12-21 13:10 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள பயணியர் நிழற்கூடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரின் பேரில், பயனற்ற பயணியர் நிழற்கூடம் என்ற தலைப்பில் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகத்தினர் பயணியர் நிழற்கூடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள், குப்பைகளை அகற்றி நிழற்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாக சீரமைக்கப்பட்டதையடுத்து, வைரிசெட்டிப்பாளையம் பொதுமக்கள் தினத்தந்தி புகாரி பெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்