வேகத்தடை வேண்டும்

Update: 2022-12-18 18:45 GMT

பங்களாப்புதூரில் சத்தியமங்கலம்- அத்தாணி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் மாணவ- மாணவிகள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கூடம் அருகே சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி