மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருவிளையாட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பஸ்களில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கிய படி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொறையாரில் இருந்து சங்கரன் பந்தல்-அரும்பாக்கம்- செம்பனார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்ல காலை, மாலை நேரங்களில் போதிய இயக்க வேண்டும்.