பயணிகள் ஏமாற்றம்

Update: 2022-12-04 14:15 GMT

கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழித்தடத்தில் தண்ணீர் பந்தல் நிறுத்தத்தில் பஸ்கள் சரிவர நின்று செல்வது இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தண்ணீர் பந்தல் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி