கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-04 14:06 GMT

கோத்தகிரி பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு குன்னூர், ஊட்டி பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பலர் அரசு பஸ் மூலம் தினமும் வந்து கல்வி பயின்று செல்கின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய பஸ் சேவை இல்லாததால், அவர்கள் பெரும் சிரமத்துடன் நின்றவாறே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி