மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர், மடப்புரம், மாஞ்சோலைதெருவில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதில் நாய்கள் இரவு நேரங்களில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. மேலும் பன்றிகள் அந்த பகுதியில் சுற்றித்திரிவதால், அப்பகுதியில் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்கள், பன்றிகளை பிடித்து செல்ல வேண்டும்.
அசோக்ராஜ், மடப்புரம்.