போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2022-11-27 10:43 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்