மயிலாடுதுறையில் இருந்து நன்னிலம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த பஸ் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி பழுதாகிறது. மேலும் பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் பஸ்சுக்குள் ஒழுகுவதால், பயணிகள் மழைநீரில் நனைந்து கொண்டும், குடையுடனும் பயணம் செய்து வருகின்றனர். இதில் முதியவர்கள், குழந்தைகள் எனஅனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ்சின் மேற்கூரையை சீரமைக்கவேண்டும்.