போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-11-09 13:01 GMT
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் மெயின் சாலையில் இருந்து, ஶ்ரீரங்கம் திரும்பும் சாலையை பிரித்தும், ஶ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல், சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு திரும்பும் சாலையை பிரித்தும் சாலையின் நடுவே மைய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. சாலையில் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பிற்காகவும், எச்சரிக்கைக்காகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புச்சுவர் மீது பலர் விபத்தை சந்திக்க கூடிய நிலையிலும், ஆபத்தை உணராமலும் அமர்ந்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே ஏதாவது அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு போக்குவரத்து போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்