சேதமடைந்த பஸ்சின் மேற்கூரை

Update: 2022-11-06 12:13 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் பஸ்சுக்குள் கசிந்து வருகிறது. இதனால் பயணிகள் மழையில் நனைந்து கொண்டு பயணம் செய்து வருகிறார்கள். இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்சின் மேற்கூரையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி