கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கிரீன் வேலி பள்ளிக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள நடைபாதை முழுவதும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கபடுகின்றன. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் நடந்துச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.