ஆபத்தான பஸ் பயணம்

Update: 2022-10-12 17:01 GMT
திட்டக்குடி பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி