ஈரோடு -கரூர் செல்லும் சாலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்காக அங்கு நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்திருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த நிழற்குடை உள்ள இடத்தில் எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. அதன் காரணமாக பயணிகள் பஸ்கள் நின்று செல்லும் இடங்களுக்கு சென்று பயணித்து வருகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடை பயனற்று போய்விட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
