மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து அச்சம்பட்டி ஊமச்சிகுளம் வழியாக செல்லும் 23ஏ பஸ் பல வருடங்களாக இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பஸ் காலையில் இயங்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்சை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.