மரப்பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-25 15:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே குரும்பக்குடி, நல்லாடை, முக்கூட்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மரப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் அந்த பகுதி மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். தற்போது இந்த பாலம் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி