ஆபத்தான பயணம்

Update: 2022-09-25 15:06 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் படிகளில் தொங்கிய படி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சில நேரங்களில் மாணவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி