கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-22 14:44 GMT
திருச்சி கே.கே.நகர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கும், உறையூரில் உள்ள மருத்துவமனைக்கும் நேரடியாக சென்றுவர போதுமான பஸ் வசதி இல்லாததால் 2 பஸ்களில் மாறி, மாறி பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள நோயாளிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கே.கே.நகரில் இருந்து உறையூர் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்