அந்தியூரில் இருந்து நகலூர் வழியாக அத்தாணி, கோபிக்கு காலை, மாலை மற்றும் இடைப்பட்ட நேரத்தில் டவுன் பஸ் ஒன்று கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.