பஸ்களில் ஆபத்தான பயணம்

Update: 2022-09-15 12:32 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் பூந்தோட்டம் பகுதியில் இருந்து எரவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்தநிலையில் பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி வழியாக கும்பகோணத்திற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். படியில் பயணம் செய்யும் போது சிலர் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்