அதிக பாரம் ஏற்றி செல்லும் டிராக்டர்கள்

Update: 2022-09-14 14:11 GMT
கரூர் மாவட்டம், நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், குந்தாணி பாளையம், சேமங்கி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், முத்தனூர், கவுண்டன்புதூர் மற்றும் சிவகிரி, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு டிராக்டரில் இரண்டு டிப்பர்களை இணைத்துக் கரும்பு பாரத்தை ஏற்றிக்கொண்டு டிராக்டர் டிரைவர்கள் ஓட்டி வருகின்றனர் . இதனால் பின்னால் வரும் டிப்பர் தெரியாமல் அதன்மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் முன்னாள் செல்லும் வாகனங்கள் மீது அதிக பாரம் இருப்பதால் பிரேக் பிடிக்காமல் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி