கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகளின் ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே முரையின்றி வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வோர் மீது போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.