விபத்துகள் தடுக்கப்படுமா?

Update: 2022-09-12 12:57 GMT

கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் 4 வழிச்சாலை உள்ளது. விவேகானந்தபுரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரத்துக்கு செல்லும் சாலை ஏழுசாட்டுபத்து பகுதியில் 4 வழிச்சாலையை கடந்து செல்கிறது. இந்த பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மற்றும் தேவையான இடத்தில் வேகத்தடைகள் அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராமதாஸ், சந்தையடி

மேலும் செய்திகள்

பஸ் வசதி