மீண்டும் அரசு பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-12 12:18 GMT
திட்டக்குடியில் இருந்து சித்தேரி, பனையாந்தூர், லட்சுமணாபுரம், கொரக்கவாடி, வடகராம்பூண்டி, கல்பூண்டி வழியாக ஆத்தூர் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கடந்த 2 வாரங்களாக இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி