கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-09-08 11:30 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, வேங்கூர், புத்தாபுரம், காந்திபுரம், ஒட்டக்குடி, கீழமுல்லக்குடி, சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சி ஆகிய கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சத்திரத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் காலை நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். இதனால் அதிக விபத்து ஏற்ட வாய்ப்பு உள்ளத. எனவே காலை நேரத்தில் மேற்கண்ட பகுதிகளில் இருந்து சத்திரத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி