பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்

Update: 2022-09-05 15:14 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பாலன் நகர் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் வழியாக செல்லும் பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைகளுக்கு செல்லும் பொதுக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்