இரவில் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும்

Update: 2022-09-04 18:01 GMT

தேனி பங்களாமேடு, பூதிப்புரம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைந்துள்ளது. இந்த ரவுண்டானா சுவற்றில் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் ரவுண்டானா இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதிகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து நிறுத்தி, அங்கு இரவில் ஒளிரும் பட்டைகளை ஒட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்