புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ரெயில்கள் சென்ற பிறகு கேட் திறக்கப்பட்ட பின்பும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.