அரசு விரைவு பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-08-31 14:28 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இங்கிருந்து இயக்கப்பட்ட பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சென்னை செல்வதற்கு புதுக்கோட்டைக்கு சென்று அங்கிருந்து மாற்று பஸ் மூலம் சென்னைக்கு சென்று வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட விரைவு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்