புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு முக்கம், அரசமரம், காமராஜர் சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றன. சில வாகன ஓட்டிகள் அவ்வப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.