புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் இருந்து தற்போது பல மாவட்டங்களுக்கு டிப்பர் லாரி மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. மணல் எடுத்துச் செல்லப்படும் லாரிகள் மணல் மீது தார்ப்பாய் போடாமல் செல்வதால் மணல் வெளியே பறந்து செல்கிறது. இதனால் லாரிக்கு பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.