சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-08-22 15:36 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி சாலை திருவாரூர்-மன்னார்குடி-நாகப்பட்டினம்-தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த நிலையில் லெட்சுமாங்குடி சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடவே படுத்துகொள்கின்றன. இதனால் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்