ஆரணியில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் காலத்தில் ஊருக்கு வெளியே இரும்பேடு இந்திரா காந்தி சிலை அருகில் காய்கறி மொத்த வியாபார மார்க்கெட் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் கொட்டப்படும் அழுகிய காய்கறிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-ரகுராமன், ஆரணி.