கோவை மாநகராட்சி 68 மற்றும் 69-வது வார்டுக்கு உட்பட்ட பாரதிதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவித்து வைக்கப்படுகின்றன. அவற்றை முறையாக அகற்றுவது இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.